Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: பரமத்தி அருகே உள்ள மேல்சாத்தம்பூரில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள மேல்சாத்தம்பூரில் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இயக்குனர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரியா தையல் பயிற்சி மைய உரிமையாளரும், நிறுவன கற்பிப்பாளருமான பத்மப்ரியா வரவேற்புரை ஆற்றினார்.
பரமத்தி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திலகவதி வெற்றிவேல் சிறப்புரையாற்றி சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் மேல்சாத்தம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் யோகாம்பிகா அன்பரசு, துணைத் தலைவர் மைதிலி ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திவாகர் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.